ப்3ரஹ்மணோ ஹி ப்1ரதி1ஷ்டா2ஹமம்ருத1ஸ்யாவ்யயஸ்ய ச1 |
ஶாஶ்வத1ஸ்ய ச1 த4ர்மஸ்ய ஸுக2ஸ்யைகா1ன்தி1க1ஸ்ய ச1 ||27||
ப்ராஹ்மணஹ---—ப்ரஹ்மனின்; ஹி--—மட்டும்; பிரதிஷ்டா--—அடிப்படை; அஹம்--—நான்; அம்ருதஸ்ய—--அழியாதத; அவ்யயஸ்ய—--அழியாததின்; ச—--மற்றும்; ஶாஶ்வதஸ்ய—---நித்திய; ச—--மற்றும்; தர்மஸ்ய--—தர்மத்தின்; ஸுகஸ்ய---தெய்வீக பேரின்பத்தின்; ஐகாந்திகஸ்ய--—முடிவற்றதின்; ச-மற்றும்
BG 14.27: நான் உருவமற்ற, அழியாத, நித்திய தர்மத்தின் மற்றும் முடிவில்லாத தெய்வீக பேர் இன்பமான ப்ரஹ்மத்தின் அடிப்படை.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
முந்தைய வசனம் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் உருவமற்ற ப்ரஹ்மனுக்கும் உள்ள உறவைப் பற்றிய கேள்வியை எழுப்பலாம். ஸர்வ வல்லமையுள்ள கடவுள் தனது ஆளுமையின் -- உருவமற்ற மற்றும் தனிப்பட்ட இரு அம்சங்களையும் கொண்டிருக்கிறார் என்று முன்னர் கூறப்பட்டது -. இங்கே, ஞானிகள் வழிபடும் உருவமற்ற ப்ரம்ஹன் கடவுளின் தனிப்பட்ட வடிவத்திலிருந்து வரும் ஒளி என்பதை ஸ்ரீ கிருஷ்ணர் வெளிப்படுத்துகிறார்--உருவமற்ற பிரம்மத்திற்கு கடவுளின் தனிப்பட்ட வடிவம் அடிப்படை. பத்ம புராணம் கூறுகிறது:.
யன்னகெ2ந்து3ருச்1சி1ர்ப்3ரஹ்ம த்4யேயம் ப்3ரம்மாதி3பி1ஹி ஸுரைஹி
கு3ணத்1ரயமதீ1த1ம் த1ம் வந்தே3 விருந்தா3வனேஶ்வரம் (பா1தா1ள கா2ண்டம் 77.60)
‘பிருந்தாவனத்தின் இறைவனான ஸ்ரீ கிருஷ்ணரின் பாதத்தின் கால் நகங்களிலிருந்து வெளிப்படும் ஒளி, ஞானிகளும், தேவலோகத் தேவர்களும் கூட தியானிக்கும் உன்னதமான ப்ரஹ்மம்.’. இவ்வாறே, சைதன்ய மஹாபிரபு கூறினார்:
த1ன்ஹார அங்கே3ரா ஶுத்3த4 கி1ரண-மண்ட3ல
உபநிஷத்3 க1ஹே த1ன்ரே ப்3ரஹ்ம ஸுநிர்மல
(சை1த1ன்ய ச1ரிதா1மிர்த1ம், ஆதி3 லீலா 2.12)
‘கடவுளின் தெய்வீக உடலிலிருந்து வெளிப்படும் பிரகாசம், ப்ரஹ்மம் என்று உபநிடதங்கள் விவரிக்கின்றன.’ இவ்வாறு, ஸ்ரீ கிருஷ்ணர் இந்த வசனத்தில், முக்குணங்களின் நோய்க்கான பரிகாரம், உன்னதமான இறைவனின் தனிப்பட்ட வடிவத்தில் அசையாத பக்தியில் ஈடுபடுவதே என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்துகிறார்.